மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபர் - இடைவிடாமல் குறைத்து காப்பாற்றிய நாய்!
மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபரை அருகில் இருந்த நாய் ஒன்று இடைவிடாமல் குறைத்தே காப்பாற்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு
ஜப்பான் நாட்டின், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் எனும் பகுதியில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார்.
இதனை மற்றவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்கிற மங்கிரோல் வகை நாய் இடைவிடாமல் குரைத்து கவனத்தை ஈர்த்தது.
அதனால் அங்கிருந்தவர்கள், அந்த நாயின் அருகில் விழுந்து கிடந்த நபரை பார்த்து அதிர்ந்தனர்.
விருது
இதனை தொடர்ந்து, அங்குள்ளவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த நபர் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்தது.
தற்போது மாரடைப்பால் சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய குமு நாய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.