ஜப்பான் முன்னாள் பிரதமர் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று இரவு ஜப்பான் நாட்டிற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ஜப்பான் செல்லும் பிரதமர்
கடந்த மாதம் ஜுலை 8-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்டார்.
அவரின் இறுதிச் சடங்கை மிக பிரமாண்டமாக நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இறுதிச் சடங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அமெரிக்காவின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
மிகுந்த பணிச்சுமை இருப்பினும், தனிப்பட்ட முறையிலும், தனக்கு நெருங்கிய நண்பதர் என்பதாலும் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பிரதமர் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.