3 முறை நிராகரிக்கப்பட்ட கூட்டணி அது; ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை - ஒரே போடுபோட்ட விஜய்

Vijay DMK BJP Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Apr 12, 2025 07:56 AM GMT
Report

3 முறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பா.ஜ.க.வும்,

vijay

மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் தி.மு.க.வும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல. உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே. தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில்,

தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப்பெரிய ஆச்சர்யமில்லை. பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே,

எதிர்க்கட்சிகளுக்கு அதுமட்டும்தான் முக்கியம்; நாடு முக்கியமல்ல - பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகளுக்கு அதுமட்டும்தான் முக்கியம்; நாடு முக்கியமல்ல - பிரதமர் மோடி

நிர்ப்பந்தக் கூட்டே..

ஏற்கெனவே மூன்றுமுறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 'நாங்கள்தான் தி.மு.க.விற்கு எதிரான ஒரே அணி' என்று பா.ஜ.க.வும், 'தாங்கள்தான் பா.ஜ.க.விற்கு எதிரான அணி' என்று தி.மு.க.வும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர்.

3 முறை நிராகரிக்கப்பட்ட கூட்டணி அது; ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை - ஒரே போடுபோட்ட விஜய் | Dmk Is An Indirect Ally Of Bjp Aiadmk Says Vijay

தமிழ்நாட்டு மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். இனி, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது. பிளவுவாத பா.ஜ.க. மற்றும் மக்கள் விரோத தி.மு.க.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான,

மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி!

அதே நேரம் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்துச் சென்று. உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். வாகை சூடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.