'எல்லாரும் பைத்தியமாகிட்டாங்க'.. கிருத்திகா உதயநிதி வெளியிட்ட பதிவு - என்ன காரணம்?

Tamil Cinema Tamil nadu Kiruthiga Udhayanidhi Tamil Actress
By Jiyath Mar 10, 2024 11:50 AM GMT
Report

இயக்குநர் கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருத்திகா உதயநிதி

வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி ஆவார். இந்நிலையில் கிருத்திகா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் "சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடவடிக்கைகளை பார்த்து வியப்படைவதாகவும், அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர் என்றும் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த சிலர் அவருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், சிலர் அவருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஜப்பானில் நடந்த பார்ட்டி; நடிகை சாய் பல்லவி செய்த காரியம் - வைரலாகும் Video!

ஜப்பானில் நடந்த பார்ட்டி; நடிகை சாய் பல்லவி செய்த காரியம் - வைரலாகும் Video!

என்ன காரணம்?    

அந்தவகையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் மங்கை என்ற திரைப்படம் எடுத்தது தெரியவந்துள்ளது.

இந்த படத்தின் பாடல் ஒன்றை கிருத்திகா உதயநிதி வெளியிட்டு இருந்தார். இதனால் க்ருத்திகாவை போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விஷயங்களில் தொடர்புபடுத்தி சிலர் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் தான் கிருத்திகா உதயநிதி அந்த பதிவை வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.