கவுதம் கம்பீர் இன்னும் அறிவிக்கப்படவில்லை - அதற்குள் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து பேச்சுக்கள் இன்னும் முடிந்திராத பாடில்லை.
தினேஷ் கார்த்திக்
இந்திய அணியில் நீண்ட காலமாக தனது பங்கினை அளித்து வந்த தினேஷ் கார்த்திக், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக செயல்பட்ட அவர், தொடர் முடிவடைந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டிலும் இருந்தும் விடைபெறுள்ள தினேஷ் கார்த்திக் தற்போது பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை பயிற்சியாளர்
தொடர் முடிந்து 2 மாதமே ஆன நிலையில், அவரை நியமித்துள்ளது பெங்களூரு அணி. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள்.
அடுத்த வருடம் வரபோகும் தொடருக்கு இப்போதே பயிற்சியாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், இந்திய அணிக்கான அடுத்த தலைமை பயிற்சியாளர் நியமனம் இன்னும் முடிவாகவில்லை.
கம்பீர் தான் அடுத்த பயிற்சியாளர் என செய்திகள் வெளிவந்து விட்ட போதிலும், இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் பிசிசிஐ அறிவித்திடவில்லை.