ஸ்டாலினை முதல்வராக்குவோம், அய்யயோ சாரி - உளறி கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Vinothini Jul 21, 2023 06:19 AM GMT
Report

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திண்டுக்கல் சீனிவாசன் வாய் தவறி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் ஏற்பட்ட விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

dindigul-srinivasan-mistakenly-says-stalin-name

அதன்படி திண்டுக்கல் நாகல் நகரில் நேற்று ஆர்ப்பாட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உளறிய சீனிவாசன்

இந்நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசுகையில், "தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம்" என்று கூறினார். அப்பொழுது கட்சியில் இருந்தவர்கள் அதனை கவனித்து அவரிடம் கூறினார்கள்.

dindigul-srinivasan-mistakenly-says-stalin-name

அதன்பிறகு திருத்தி பேசினார், தொடர்ந்து அவர், "அய்யயோ, வார்த்தை தவறாக வந்துவிட்டது. ஸ்டாலினை தோற்கடித்து எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் ஆக்கி காட்டுவோம் என நமது தாய்மார்கள் தெரிவித்திருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.