ஏதோ பேருக்கு அரசியல் வரவில்லை.. அந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்- விஜய்!

Vijay Viluppuram Thamizhaga Vetri Kazhagam
By Swetha Oct 04, 2024 01:30 PM GMT
Report

ஏதோ பேருக்கு அரசியலுக்கு வரவில்லை என விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய்

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாடு வரும் 27 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஏதோ பேருக்கு அரசியல் வரவில்லை.. அந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்- விஜய்! | Didnt Came Politics For Name Sake Says Vijay

வி.சாலை எனும் வெற்றி சாலையில் சந்திப்போம். மாநாடு தொடங்கி முடியும் வரை ராணுவ கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா என சிலர் கேள்விக் கணைகளை வீசுகிறார்கள்.

மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் போதுதான் அவர்களுக்குஎன்னவென்று தெரியும். தவெக மற்ற கட்சிகளை போல சாதாரண இயக்கம் அல்ல.ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நிரூபிப்போம்.

விஜய்யின் மாநாட்டுக்கு அனுமதி தர என்ன பிரச்சனை? இதனால் யாருக்கு என்ன பயன் - பிரேமலதா!

விஜய்யின் மாநாட்டுக்கு அனுமதி தர என்ன பிரச்சனை? இதனால் யாருக்கு என்ன பயன் - பிரேமலதா!

அந்த கேள்வி

வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப்போகிற கட்சி என்பதை இனிமேல் புரிந்து கொள்வர். மக்கள் இயக்கமாக இருந்த நாம் மக்களோடு மக்களாக களமாடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க போகிறோம். தவெகவின் முதல் மாநாடு என்பது நம் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு.

ஏதோ பேருக்கு அரசியல் வரவில்லை.. அந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்- விஜய்! | Didnt Came Politics For Name Sake Says Vijay

பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான. மக்கள் இயக்கமாக இருந்த நாம் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் இயக்கமாக மாறிவிட்டோம். மக்களுக்கு இன்னமும் முழுமை பெறாத அடிப்படை தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும்.

என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கும் லட்சியக் கனல் இதுதான் என்று தெரிவித்துள்ளார்.