ஐபிஎல் 2025 சீசனில் தோனி விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!

MS Dhoni TATA IPL
By Sumathi Sep 30, 2024 09:00 AM GMT
Report

ஐபிஎல் 2025 சீசனில் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் 2025

ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு ஐபிஎல் போட்டி தொடர்பான விதிகளை வகுப்பது உள்ளிட்டவை குறித்து பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டது.

ipl 2025

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதிகபட்சமாக 2 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத (அன்கேப்டு) வீரர்கள் மட்டுமே இருக்கமுடியும்.

ஐபிஎல் 2025 போட்டிக்கான ஏலத்தின் போது அணிகளின் கையிருப்புத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இனிவரும் சீசனில் ஏலத்தொகை, ஊக்கத்தொகை, போட்டி ஊதியம் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. இம்பாக்ட் பிளேயர் உள்பட விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு போட்டியின் போதும் தலா ரூ.7.50 லட்சம் வழங்கப்படும்.

பிராவோ இறக்கிய இடி; KKR அணியில் முக்கிய பதவி - சிஎஸ்கே ரசிகர்கள் வேதனை!

பிராவோ இறக்கிய இடி; KKR அணியில் முக்கிய பதவி - சிஎஸ்கே ரசிகர்கள் வேதனை!

புதிய விதிகள்

இந்தத் தொகை ஒப்பந்த தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் கட்டாயமாக தங்களது பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை வெளிநாட்டு வீரர் பதிவு செய்யாமல் இருந்தால், அந்த வீரர் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாட தகுதியற்றவராக கருதப்படுவார்.

dhoni

ஐபிஎல் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்த எந்தவொரு வீரரும், ஏலத்தில் ஓர் அணியால் வாங்கப்பட்ட பின்னர், சீசன் தொடங்குவதற்கு முன்பாக தங்களால் விளையாட முடியாத நிலை இருப்பதாக அறிவிக்க நேர்ந்தால், அந்த வீரர் அந்தத் தொடரிலும் அடுத்து வரும் 2 ஐபிஎல் சீசனிலும், ஏலத்திலும் பங்கேற்கத் தடை விதிக்கப்படும்.

கேப்டு இந்திய வீரர்ஒருவரை `அன்கேப்டு வீரராக` மாற்றமுடியும். அதாவது சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அனுபவமுள்ள, ஓய்வு பெற்ற ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியில் பங்கேற்காமல் இருக்கவேண்டும்.

மேலும்,பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்திலும் அவரது பெயர் இடம் பெறாமல் இருந்தால் அவர் “அன்கேப்டு வீரராக” மாறுவார். இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும். மேலும், இம்பாக்ட் பிளேயர் விதிமுறை 2027 ஐபிஎல் சீசன் வரை தொடரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெகா ஏலத்துக்கு முன்னதாக 6 வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக நிச்சயம் தோனி 6 வீரர்களில் ஒருவராக சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.