CSK தோல்விக்கு நீயே காரணம் - இளம் வீரரிடம் கோபத்தை வெளிப்படுத்திய தோனி!!
சென்னை அணி முக்கியமான பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது.
சென்னை பேட்டிங்
சென்னை அணி அடுத்து சுற்றான Playoff வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ள பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி துவக்கம் முதலே பெரும் சறுக்கலை சந்தித்து வந்தது.
ரஹானே 29(24) , துபே 0(1), ஜடேஜா 2(4) என வரிசையாக சென்னை அணியின் வீரர்கள் ஏமாற்றினார்கள். சற்று தாக்கு பிடித்து ஆடிய அணியின் கேப்டன் ருதுராஜ் 62(48) எடுத்து வெளியேறினார். 20 ஓவர்களில் சென்னை அணி 162 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி, நேர்த்தியாக ஆரம்பம் முதலே வெளிப்படுத்தியது.
பிராப்சிம்ரன் 13(10) வெளியேறிய நிலையில், பேர்ஸ்டோ 46(30), ரூஸ்ஸோ 43(23) என நேர்த்தியாக விளையாட 17.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.
போட்டிக்கு பிறகு நடைபெற்ற மீட்டிங்கில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இளம் வீரரிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமீர் ரிஸ்வி 21(23) வெறும் ஒரே ஒரு ஃபோர் மட்டுமே எடுத்திருந்தார்.
காரணம்
20 லட்சத்தில் இருந்த அவரை கடும் போட்டிக்கு பிறகு சென்னை அணி 8.4 கோடிக்கு பெற்றது. சென்னை அணியின் அடுத்த நட்சத்திரமாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படும் அவர், இது வரை பெரிதாக சோபிக்கவில்லை. மீட்டிங்கில் பேசிய தோனி, சமீர் ஒரு பவர் ஹிட்டர். அவர் 23 பந்தில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றதாக கூறப்படுகிறது.
தனக்கு அடுத்து, அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சமீர் ரிஸ்வியை தான் பார்ப்பதாக தோனி கூறியதாக கூறப்படும் நிலையில், அவர் இவ்வாறு விளையாடியது ஏமாற்றமாக இருப்பதாகவும், தோல்விக்கு இதுவும் முக்கிய காரணம் என தோனி அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.