ஐசிசி கனவு அணியில் கேப்டனாக தோனி தேர்வு

cricket dhoni icc
By Jon Dec 28, 2020 01:06 PM GMT
Report

2020-ம் ஆண்டு முடிந்து 2021-ம் ஆண்டு தொடங்க உள்ளது , இதையொட்டி கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதுகள் வழங்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விருதுகள் நாளை அறிவிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சோபர்ஸ் விருது வழங்கப்படும். இந்த நிலையில் ஐசிசி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒருநாள் போட்டி கிரிக்கெட்டின் கனவு அணியில் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் போட்டி அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, டோனி (கேப்டன்), உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

மேலும், வார்னர், ஷாகிப் உல் ஹாசன், டி வில்லியர்ஸ், பெல்ட் , இம்ரான் தாஹிர், ஸ்டார்க், மலிங்கா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.