தோனிக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல்லா? எதிர்பார்க்காத தகவலை சொன்ன நண்பர்!

MS Dhoni Cricket Sports IPL 2024
By Jiyath Mar 03, 2024 08:30 AM GMT
Report

எம்.எஸ்.தோனியின் ஒய்வு குறித்து அவரது நெருங்கிய நண்பரான பரம்ஜித் சிங் பேசியுள்ளார்.

எம்.எஸ்.தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.

தோனிக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல்லா? எதிர்பார்க்காத தகவலை சொன்ன நண்பர்! | Dhoni Friend Says Ms Will Not Retire With 2024 Ipl

கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்தான் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.

விராட் கோலி செய்த காரியம்; எனக்கு அவமானமா இருக்கு - பிரபல வீரர் கருத்து!

விராட் கோலி செய்த காரியம்; எனக்கு அவமானமா இருக்கு - பிரபல வீரர் கருத்து!

நண்பர் தகவல் 

இந்நிலையில் தோனியின் ஒய்வு குறித்து, அவரது நெருங்கிய நண்பரான பரம்ஜித் சிங் கூறுகையில் "வரவிருக்கும் 2024 ஐ.பி.எல் சீசனுக்கு பிறகு தோனி ஓய்வுபெற வாய்ப்பு இல்லை.

தோனிக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல்லா? எதிர்பார்க்காத தகவலை சொன்ன நண்பர்! | Dhoni Friend Says Ms Will Not Retire With 2024 Ipl

இன்னும் ஒன்று அல்லது இரண்டு சீசன்களில் விளையாடும் அளவிற்கு அவர் உடற்தகுதியுடன் இருக்கிறார். தோனி நிச்சயம் 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் அதற்கு காரணம் அவருடைய மிகச்சிறந்த உடற்தகுதிதான்" என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.