தோனி தலைமையில் விதவிதமாக பயிற்சியில் ஈடுபட்ட சிஎஸ்கே வீரர்கள்

dhoni player csk traninig
By Jon Mar 12, 2021 01:34 PM GMT
Report

ஐபிஎல் 2021 வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30 வரையில் நடைபெறுகிறது. மேலும் இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் 11-ம் தேதிலிருந்து பயிற்சியை தொடங்கினர்.

கடந்த 4 ம் தேதி சென்னை வந்த தோனி ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு நேற்றுமுதல் வலைபயிற்சியை தொடங்கினார். தோனி தலைமையில் அம்பதி ராயுடு, கெய்க்வாட், தமிழக வீரர்களான ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகியோர் வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.

கடந்தாண்டு மோசமாக அமைந்ததை மாற்றியமைக்கும் முனைப்பில் சென்னை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.