ரட்சிதாவுக்கு மெஸேஜ் செய்தேன்..ஆனால் ரீப்ளை இல்ல - வருத்தம் தெரிவித்த கணவர்!

Bigg Boss Star Vijay Serials Rachitha Mahalakshmi
By Sumathi Nov 18, 2022 04:30 PM GMT
Report

ரட்சிதாவுடன் இருக்கும் பிரச்சனைகள் குறித்து அவரது கணவர் தினேஷ் மனம் திறந்துள்ளார்.

ரட்சிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் அறிமுகமான ரட்சிதா மகாலட்சுமி இந்த சீரியலுக்கு பின் ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றார். மேலும் நடிகர் தினேஷ் என்பவரை 2012 ஆம் ஆண்டு காதலித்து ரச்சித்தா மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.

ரட்சிதாவுக்கு மெஸேஜ் செய்தேன்..ஆனால் ரீப்ளை இல்ல - வருத்தம் தெரிவித்த கணவர்! | Dhinesh Opens About Issue With Rachitha

இதனிடையே இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இல்லாத காரணத்தால் தினேஷ் மனமுடைந்து உள்ளார் என்று செய்தி வெளியானது. மேலும் தினேஷுக்கு சீரியல் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில் ரட்சிதா மகாலட்சுமிக்கு சீரியல் வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கியது.

குடும்ப விவகாரம்

இதனால் இவர்கள் இருவருக்கும் மனரீதியாக சண்டைகள் உருவானதையடுத்து இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இந்நிலையில், பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக வலம் வருகிறார்.

ரட்சிதாவுக்கு மெஸேஜ் செய்தேன்..ஆனால் ரீப்ளை இல்ல - வருத்தம் தெரிவித்த கணவர்! | Dhinesh Opens About Issue With Rachitha

இதற்கிடையில், இவரது கணவர் தினேஷ், ரச்சிதா குறித்து மனம் திறந்துள்ளார். அதில், ரச்சிதா குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. அவற்றையெல்லாம் நான் நம்ப மாட்டேன். ரச்சிதாவுக்கும் தனக்கும் இருப்பது சிறிய கருத்து வேறுபாடுதான் அது விரைவில் சரியாகும்.

கணவர் வருத்தம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று தெரிந்ததுமே அவருக்கு வாழ்த்து தெரிவித்து மெஸேஜ் செய்ததாகவும் ஆனால் மெஸேஜை பார்த்துள்ள ரச்சிதா தனக்கு ரிப்ளை செய்யவில்லை. ரச்சிதா வெளியே வந்ததும் இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசி பிரச்சனையை தீர்க்க உள்ளோம்.

ரச்சிதா ராபர்ட் மாஸ்டரிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருப்பது, பிரச்சனை வேண்டாம் என்பதற்காகதான். அதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.