கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத ரட்சிதா! பிரிவு உறுதியா?

Bigg Boss Rachitha Mahalakshmi
By Sumathi Oct 10, 2022 03:30 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா தனது கணவர் குறித்து பேசாதது அவரது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் அறிமுகமான ரட்சிதா மகாலட்சுமி இந்த சீரியலுக்கு பின் ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றார். மேலும் நடிகர் தினேஷ் என்பவரை 2012 ஆம் ஆண்டு காதலித்து ரச்சித்தா மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.

கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத ரட்சிதா! பிரிவு உறுதியா? | Rachitha Didn T Talk About Dinesh In Bigg Boss

இதனிடையே இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இல்லாத காரணத்தால் தினேஷ் மனமுடைந்து உள்ளார் என்று செய்தி வெளியானது. மேலும் தினேஷுக்கு சீரியல் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில் ரட்சிதா மகாலட்சுமிக்கு சீரியல் வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கியது.

 ரட்சிதா மகாலட்சுமி

இதனால் இவர்கள் இருவருக்கும் மனரீதியாக சண்டைகள் உருவானதையடுத்து இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். ஆனால், இது தற்காலிக பிரிவு தான் என தினேஷ் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கும் ரட்சிதா அவரது குடும்பத்தினரை அறிமுகப்படுத்தும்போது அப்பா, அப்பா மற்றும் சகோதரரை பற்றி பேசினார். அவரது பூனைக்குட்டியை பற்றி கூட பேசினார்.

விவாகரத்தா?

ஆனால் கணவர் தினேஷை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. "I fall for people very easily. ஈஸியா நம்பிடுவேன்" என ரட்சிதா குறிப்பிட்டார். இது கணவரை குறித்து இருக்குமோ என அவரது ரசிகரகள் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும், கணவர் தினேஷ் உடன் பிரிவு நிரந்தரமானதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.