150 கோடியில் போயஸ் கார்டனில் வீடு - மனைவியுடன் குடியேறப்போகும் தனுஷ்!
நடிகர் தனுஷ் தனது மனைவியுடன் போயஸ்கார்டனில் கட்டிவரும் வீட்டில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் திரைப்படங்கள் தவிர இந்தி படங்களிலும் நடித்து உள்ளார். ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்து உள்ளார். தற்போது தமிழில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
இவர் 2004-ல் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
150 கோடியில் வீடு
இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது பிரியும் முடிவில் இருந்து இருவரும் பின்வாங்கியுள்ளனர். மேலும், நவம்பர் 18 ஆம் தேதி அவர்களின் திருமண நாளன்று இந்த செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனுஷ் போயஸ் கார்டனில் 150 கோடி செலவில் பிரம்மாண்ட முறையில் வீடு கட்டி வருகிறார்.
அந்த கட்டிடத்தின் வேலைகள் நிறைவடையவுள்ள நிலையில், வருகிற ஜனவரி மாதம் அந்த வீட்டிற்கு தனுஷ், ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து குடியேறவுள்ளார் என கூறப்படுகிறது.