மீண்டும் சேர்ந்து வாழ போகும் தனுஷ், ஐஸ்வர்யா? ரசிகர்கள் ஆர்வம்!

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Gossip Today
By Sumathi Jul 06, 2022 11:00 AM GMT
Report

தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ்வது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் - ஐஸ்வர்யா

நடிகர் தனுஷும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 16 மற்றும் 12 வயதில் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில்,

dhanush

திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். மகன்கள் இருவரும் அம்மாவிடமும் அப்பாவிடமும் மாறி மாறி இருந்து வருகின்றனர்.

தகவல்

எப்படியும் இருவரும் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என நம்பியிருந்தனர் ரசிகர்கள். ஆனால் இருவருமே நண்பர்களை போன்றே சமூக வலைதளங்களில் பழகி வந்தனர்.

மீண்டும் சேர்ந்து வாழ போகும் தனுஷ், ஐஸ்வர்யா? ரசிகர்கள் ஆர்வம்! | Dhanush And Aishwarya Waiting For The Wedding Day

இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போவதாக தகவல் பரவி வருகிறது.

மகன்கள் விருப்பம்

ஆரம்பத்தில் முரண்டு பிடித்த தனுஷ் தற்போது இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஐஸ்வர்யா தற்போது அவகாசம் கேட்டிருப்பதாக தகவல் வெளியானது.

குடும்பத்தினர் மட்டுமின்றி பிள்ளைகள் இருவரும் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்றும் விரும்புவதாகவும் இதனால் ஐஸ்வர்யாவும் தனுஷும் மீண்டும் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 திருமண நாள்

மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களின் திருமண நாளான நவம்பர் 18 ஆம் தேதி மீண்டும் சேர்ந்து வாழ்வது குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதும் தெரியபடவில்லை. 

பாலிவுட்டில் களமிறங்கும் சமந்தா.. இவருக்கு ஜோடியாவா!