அமலாவுடன் நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போட்ட ரஜினி - கடுப்பான லதா..!

Rajinikanth
By Thahir May 20, 2022 03:19 AM GMT
Report
110 Shares

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தனது அசாத்திய நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த போது ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளார். ரஜினிகாந்தின் திருமண வாழ்க்கையும் பல சர்ச்சைகள் கொண்டிருந்தது.

அமலாவுடன் நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போட்ட ரஜினி - கடுப்பான லதா..! | Rajini Taking Relaxing Bath Swimming Pool Amala

1980 களில் இவர் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை லதா மீது காதல் ஏற்பட்டது. இச்செய்தியை அறிந்த அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கண்டித்ததால் அது தோல்வியில் முடிந்துள்ளது என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ரஜினி தன் முன்னாள் காதலியின் பெயர் கொண்ட பாடகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகளுடன் நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களுடைய வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அமலாவுடன் நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போட்ட ரஜினி - கடுப்பான லதா..! | Rajini Taking Relaxing Bath Swimming Pool Amala

அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு பிரபல நடிகை அமலாவின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் வேலைக்காரன் படத்தில் முதல் முறையாக ஜோடியாக நடித்துள்ளனர்.

அதிலிருந்து இருவருக்குமான நட்பு நெருக்கமாகியுள்ளது அதன் பிறகு இருவரும் கொடி பறக்குது,மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் இடையேயான நட்பு நெருக்கமாகியுள்ளது. அமலாவின் சூட்டிங் எங்கு நடந்தாலும் ரஜினிகாந்த் சென்று அவரை சந்திக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

அமலாவுடன் நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போட்ட ரஜினி - கடுப்பான லதா..! | Rajini Taking Relaxing Bath Swimming Pool Amala

அப்போது இவர்களின் நட்பு குறித்து பத்திரிக்கைகளில் கிசுகிசு எழுதப்பட்டன.அவர்கள் இருவரும் இணைந்து வெளிநாடுகள் செல்வது போன்றும் பேசப்பட்டது.

இதனிடையே ரஜினியும்,அமலாவும் சேர்ந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் வெளியானது.இதனால் லதா அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது ரஜினி தன் குடும்பத்தை விட்டு தனியாக பிரிந்து வந்து தன் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லதா உடனே பாலச்சந்தரை சந்தித்த நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து ரஜினியை அழைத்து பேசிய அவர்,நீ செய்வது தவறு உன் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க வேண்டும்.

புகழுடன் இருக்கும் நீ இப்படி ஒரு விஷயத்தை செய்தால் பெண்கள் மத்தியில் உனக்கு இருக்கும் ஆதரவு குறைந்து விடும். சினிமாவிலும் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட ரஜினி தனது விவாகரத்து முடிவை கைவிட்டுள்ளார். இச்சம்பவங்கள் அப்போது பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன.