அதனால் தான் போட்டி போட்டுக்கொண்டு தனுஷூம், ஐஸ்வர்யாவும் இந்த முடிவா!
தனுஷூம், ஐஸ்வர்யாவும் ஒரே நடிகரை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்கம்
நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு கோணங்களில் கலக்கிய தனுஷ் இயக்கிய படம் பவர் பாண்டி. அதன்பின் நாகார்ஜுனா, அதிதி ராவ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட் படமொன்றை இயக்கி வந்தார். ஆனால் அப்படம் சில பிரச்சனைகளால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
தற்போது, மீண்டும் தனுஷ் இயக்கவிருக்கும் படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா, விஷ்ணு விஷால் நடிப்பது உறுதியாகியுள்ளது. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்திலும் விஷ்ணு விஷால் தான் நடிக்கிறார்.
ஒரே ஹீரோ
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்திற்கு விஷ்ணு விஷாலை முன்பு ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தால் லாபம் கிடைக்காமல் நஷ்டம் தான் ஏற்பட்டது. இதையடுத்து வுண்டர்பார் நிறுவனத்தை கைவிட்டார் தனுஷ்.
அப்பொழுது போடப்பட்ட டீலிங்கை அடுத்து தான் தற்போது தான் இயக்கவிருக்கும் படத்தில் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்கிறார் என சொல்லப்படுகிறது. அதே காரணத்தால் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விஷ்ணு விஷாலுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பார் எனக் கூறப்படுகிறது.
தனது கேப்டன் மில்லர் பட வேலையை முடித்த பிறகு தன் படத்தை இயக்கத் துவங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.