தன் பிறந்தநாளில் ஆசையாக கேட்ட தனுஷ்..No சொன்ன ஐஸ்வர்யா?

Dhanush Aishwarya Rajinikanth
By Nandhini Jul 29, 2022 10:01 AM GMT
Report

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷ், மற்றும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

தனுஷ் பிறந்தநாள்

நடிகர் தனுஷ் நேற்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடினார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அசத்தி வரும் நடிகர் தனுஷுக்கு உலகம் முழுக்க இருக்கும் அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். நடிகர், நடிகைகள், ரசிகர்கள் என டுவிட்டரில் வாழ்த்து மழையில் நனைந்தார் நடிகர் தனுஷ்.

‘தி கிரே மேன்’ படத்தை இயக்கிய ருஸோ சகோதரர்களோ, ‘எங்களின் செக்ஸி தமிழ் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று டுவிட் செய்திருந்தனர். ஆனால், ஐஸ்வர்யாவோ, தனுஷூக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. தன் அப்பா ரஜினிகாந்த்தோடு நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆசைப்பட்ட தனுஷ் மறுத்த ஐஸ்வர்யா

நேற்று தன்னுடைய பிறந்தநாளன்று மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் நேரம் செலவிட விரும்பியுள்ளார் தனுஷ். இதையடுத்து மகன்களை தன்னோடு அனுப்பி வைக்குமாறு ஐஸ்வர்யாவிடம் கேட்டுள்ளாராம். ஆனால், அதற்கு ஐஸ்வர்யா ஒரு கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் மகன்களுடன் எங்கு சென்றாலும் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது. அந்த புகைப்படங்களை பார்ப்பவர்கள், தனுஷுக்கு தான் பிள்ளைகள் மீது அதிக பாசம் என்று கமெண்ட் செய்கின்றனர். இதனையடுத்து, மகன்களை உங்களுடன் அனுப்பினால் போட்டோ எடுத்து வெளியிடக் கூடாது என்று ஐஸ்வர்யா கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ‘தி கிரே மேன் ப்ரீமியர் ஷோ’வில் தனுஷும், மகன்களும் கலந்து கொண்டனர். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

மகன்கள் நாடு திரும்பியதும் அவர்களுடன் சேர்ந்து ஐஸ்வர்யா எடுத்து வெளியிட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகவில்லை. இதனால்தான், இப்படி ஒரு கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Dhanush - Aishwarya