வாடிக்கையாளர் ஆர்டர் செய்த சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு... சோம்பேறி என திட்டிய டெலிவரி பாய்!

Delhi
By Sumathi Jul 14, 2023 12:14 PM GMT
Report

டெலிவரி பாய் ஒருவர் வாடிக்கையாளருக்கு அட்வைஸ் கொடுத்த சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.

உணவு டெலிவரி 

ரெட்டிட் யூசர் ஒருவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், வாடிக்கையாளர் டெலிவரி ஏஜென்டிடம் “விதிமுறைகளை மீறியதற்காக உனக்கு வேலை பறிபோகும்” என்று கூறுகிறார். அதற்கு அவர், டெலிவரி ஏஜென்ட் “உன்னால் இதை நிரூபிக்க முடியாது,

வாடிக்கையாளர் ஆர்டர் செய்த சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு... சோம்பேறி என திட்டிய டெலிவரி பாய்! | Delivery Agent Eat Customer Ordered Food Call Lazy

நீயும் உனது குழந்தைகளும் உணவை ரசித்து உண்ணுங்கள்” எனப் பதிலளித்துள்ளார். தொடர்ந்து, வாடிக்கையாளர் “என்னிடம் நீ வீட்டிற்குள் வந்து உணவை டெலிவரி செய்யவே இல்லை என்பதற்கான வீடியோ பதிவு ஆதாரங்கள் உள்ளன” என அனுப்பியுள்ளார்.

மோசமான அனுபவம்

இதற்கு, டெலிவரி ஏஜென்ட், “நான் உன்னை போல் முட்டாள் இல்லை. நீ ஒரு சோம்பேறித்தனமான தந்தையாக இல்லாவிட்டால் இந்நேரம் உனது குழந்தைகளுக்கு நீயே நேரடியாக சென்று உணவை வாங்கி கொடுத்திருப்பாய்.

வாடிக்கையாளர் ஆர்டர் செய்த சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு... சோம்பேறி என திட்டிய டெலிவரி பாய்! | Delivery Agent Eat Customer Ordered Food Call Lazy

அதற்கு பதிலாக உனது குடும்பத்திற்கு உணவு அளிப்பதற்கு வேறு ஒரு வளர்ந்த ஆணை சார்ந்து இருக்க மாட்டாய்” என்று மோசமாக பேசியுள்ளார். மேலும் அந்த உணவு மிகவும் சுவையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு பல்வேறு யூசர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.