7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வளர்ப்பு பெற்றோர் கொடூரம்

Delhi Sexual harassment Child Abuse Crime
By Sumathi Feb 17, 2023 10:54 AM GMT
Report

7 வயது சிறுமியை வளர்ப்பு பெற்றோர் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ப்பு பெற்றோர்

டெல்லியைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார். இவர் மனைவி ரேணுகுமாரி. அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதி உத்தரகாண்டில் உள்ள ரூர்கியில் உள்ள இவர்களது உறவுக்காரர்களின் 7 வயது மகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வளர்ப்பு பெற்றோர் கொடூரம் | Delhi Sexual Harrasment 7 Year Adopted Daughter

சிறுமி பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை ஆசிரியர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸ் விசாரணையில் உத்தரகாண்டில் உள்ள ரூர்கியில் உள்ள இவர்களது உறவுக்காரர்களின் 7 வயது மகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

கடந்த டிசம்பரிலும், ஜனவரியிலும் இந்த கொடுமைக்கு சிறுமியை ஆளாக்கியுள்ளனர். இதனால் இருமிய சிறுமியின் நாக்கை கத்தியால் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர். ரேணு குமாரியின் கணவர் ஆனந்த்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

இவர்களது மகன் ஜான் என்பவர் சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் உடலில் 18 இடங்களில் காயம்பட்டதற்கான தழும்புகள் இருந்துள்ளது. இதனையடுத்து ஜானை போலீஸார் கைது செய்தனர். ரேணுகுமாரியும், அவரது கணவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தீவிரமாக தேடு வருகின்றனர்.