கார் குண்டு வெடிப்பு; ஒலிக்கும் மரண ஓலம் - தமிழகத்திலும் உஷார்!
கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.
குண்டு வெடிப்பு
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நுழைவு வாயில் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
13 பேர் பலி
இந்நிலையில் டெல்லியைத் தொடர்ந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் அம்மாநிலத்தில் முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சென்னை எழும்பூர், சென்டிரல் ரயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
சரிகமப லிட்டில் சாம்ஸ்: மெய்சிலிர்க்கும் குரல்.. அண்ணன் தெரிவனதற்கு பாசத்தில் கண்ணீர் விட்ட தம்பி! Manithan