ஐபிஎல் தொடரில் விலக காரணமே இதுதான் - ஹாரி ப்ரூக் விளக்கத்தால் டெல்லி அணி ஷாக்!
ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது குறித்து ஹாரி ப்ரூக் தகவல் தெரிவித்துள்ளார்.
ஹாரி ப்ரூக்
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த சீசனில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக கம்பேக் கொடுக்கவுள்ளார்.
இந்நிலையில், ரூ.4 கோடி கொடுத்து வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து பின்வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், கடந்த மாதம் எனது பாட்டி மறைந்துவிட்டார்.
சிறு வயதில் இருந்து எனது பாட்டியின் வீட்டில் வளர்ந்தவன், அவர் எப்போதும் எனக்கு ஒரு தூண் போல் நம்பிக்கை அளித்தவர். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கும் அவரே முதன்மையான காரணம். பாட்டி வீட்டில் இருந்து போது அவர் இல்லாமல் ஒருநாளும் முழுமையடையாது.
ஐபிஎல் விலகல்
நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை அவர் நேரில் வந்து பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் எனக்காக சில விருதுகளை பெற்று கொண்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அபுதாபியில் இருந்து புறப்படும் போது தான் பாட்டியின் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதனால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன். தற்போது எங்களிடம் இருந்து பாட்டி மறைந்துவிட்டார். இதனால் எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழலில் உள்ளேன். அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே சரியான முடிவாக கருதுகிறேன்.
என்னிடம் இன்னும் பல ஆண்டு கால கிரிக்கெட் மீதமிருப்பதால், வரும் காலங்களில் நிச்சயம் விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.