நடிகை தீபிகா படுகோனேவுக்கு திடீர் நெஞ்சுவலி - பதறிப்போன படக்குழு..!

Deepika Padukone
By Nandhini Jun 14, 2022 11:07 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் திரையுலகில் பிசியாக வலம் வருகிறார். சமீபத்தில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதி, மும்பையில் ரூ. 22 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கினர்.

தற்போது மும்பையில் உள்ள பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது தீபிகா படுகோனே, நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

திடீர் நெஞ்சுவலி

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகை தீபிகா படுகோனேவுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகை தீபிகா படுகோனே ‘காமினேனி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். அதன் பின்பு, உடல்நலம் சரியானது. இதனையடுத்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகை தீபிகா படுகோனே அங்குள்ள நோவேட்டல் ஓட்டலில் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருகிறார்.

திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை தீபிகா படுகோனேவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அறிந்த அவரது ரசிகர்கள், திரையுலகினர் ஷாக்காகியுள்ளனர். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பலர் இணையதளத்தில் வேண்டி வருகின்றனர்.