மன்னிப்பு கேட்கனும்.. சல்மான் கானுக்கு பிரபல தாதா கொலை மிரட்டல்!

India Salman Khan Crime
By Sumathi Jul 12, 2022 10:08 AM GMT
Report

மானை வேட்டையாடியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் நடிகர் சல்மான் கானை கொலை செய்துவிட போவதாக பிரபல தாதா எச்சரிக்கை செய்துள்ளார்.

சித்து மூஸ் வாலா கொலை

கடந்த மாதம் 29-ம் தேதி பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா சுட்டுக்கொல்லப்பட்டார்.

salman khan

இந்த கொலை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக லாரன்ஸ் பிஷ்னோயை என்ற் பிரிபல தாதாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

மான் வேட்டையாடப்பட்ட வழக்கு

1998 ஆம் ஆண்டு ஜோத்பூருக்கு அருகில் உள்ள மத்தானியாவில் உள்ள பவாத் என்ற இடத்தில் மான் வேட்டையாடியதாக சல்மான் கான், மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மன்னிப்பு கேட்கனும்.. சல்மான் கானுக்கு பிரபல தாதா கொலை மிரட்டல்! | Death Threat To Salman Khan Contact Rowdy Letter

இந்த வழக்கின் விசாரணையின் போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

தாதாவின் எச்சரிக்கை

மான்களை தங்கள் மத குருவான ஜம்பாஜி என்று அழைக்கப்படும் பகவான் ஜம்பேஷ்வரின் மறு அவதாரமாக கருதுவதால்,

காவல் துறையினரின் விசாரணையின் போது லாரன்ஸ் பிஷ்னோய் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். மான் வேட்டையாடப்பட்ட வழக்கில் தண்டனை குறித்து நான் தான் தீர்மானிப்பேன் வேறு எந்த நீதிமன்றமும் அல்ல.

சல்மானும் அவரது தந்தை சலீம் கானும் ஜாம்பாஜி கோவிலில் தனது சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால் மட்டுமே தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

சகோதரனுடன் கைக்கோர்த்த சசிகலா! வலுக்குமா பலம்?