செல்போனில் பேசியபடி செய்த காரியம் - இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய பூ!

Kerala Death Tamil
By Jiyath May 05, 2024 09:00 AM GMT
Report

அரளிப்பூவை உண்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரளிப் பூ

கேரளா மாநிலம் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா சுரேந்திரன் (24). இவர் இங்கிலாந்து நாட்டிற்கு புறப்படுவதற்கு முன் அண்டை வீட்டாரிடம் விடைபெறச் சென்றுள்ளார். பின்னர் திரும்பு வரும் வழியில் செல்போனில் பேசியபடி, தன்னை அறியாமல் ஒரு அரளி இலையையும்,

செல்போனில் பேசியபடி செய்த காரியம் - இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய பூ! | Death Of Girl Puts Spotlight On Oleander

ஒரு அரளிப் பூவையும் பிய்த்து தின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சூர்யா வாந்தி எடுத்துள்ளார். இதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலனுக்கு திருமணம் - கடை வீதியில் பெண் செய்த காரியம்!

இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலனுக்கு திருமணம் - கடை வீதியில் பெண் செய்த காரியம்!

இளம்பெண் பலி 

அங்கு சூர்யா உட்கொண்ட பூவையும், இலையையும் துப்ப வைக்க மருத்துவர்கள் முயன்றனர். இதையடுத்து உடல்நிலை சற்று சீரானதும் அவர் வீடு திரும்பியுள்ளார். ஆனால், சூர்யாவின் உடல்நிலை மீண்டும் மோசமானதால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செல்போனில் பேசியபடி செய்த காரியம் - இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய பூ! | Death Of Girl Puts Spotlight On Oleander

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சூர்யாவின் பிரேத பரிசோதனையில், அரளி விஷம் அவரது இதயத்தை பாதித்து உயிரை பறித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.