திருமணமாகி 120 நாட்களில் காதல் கணவர் மரணம்: அடுத்த நிமிடமே மனைவி செய்த திடுக்கிடும் காரியம்

wedding husband wife Villapuram
By Jon Mar 27, 2021 05:55 AM GMT
Report

திருமணமான நான்கு மாதத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் அவர் உடலை பார்த்த மறு நிமிடமே மனைவி உயிரை மாய்த்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சரளா என்பவரை 4 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ரமேஷ் தன் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வானூரிலிருந்து இருந்து கிளியனூர் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார், கிளியனூர் பொலிசார் அவரின் உடலை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ் இறந்து போன தகவலை கேட்டு சரளா அலறி துடித்துள்ளார்.

பின்னர், தன் கணவரின் உடலை பார்க்க ஜிப்மர் மருத்துவமனைக்கு ஓடோடி சென்றுள்ளார். கணவரின் உடலை பார்த்த சரளா கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி கொண்டிருந்தனர். இந்த நிலையில், திடீரென்று அவர் காணாமல் போனார். உறவினர்கள் அவரை தேடிய போது, , ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திலிருந்த கழிவறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்ததையடுத்து, மனைவியும் தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள் கதறி துடித்தனர்.


Gallery