குப்பையில் வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம் - பரபரப்பு சம்பவம்!
குப்பையில் ஆண்சிசுவின் சடலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசுவின் சடலம்
நெல்லை, மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ராஜாநகரில் தெருவோரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளுக்கு நடுவே ஒரு சிசுவின் உடலை கண்டுள்ளனர். உடனே, அதிர்ச்சியில் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தீவிர விசாரணை
அதன் அடிப்படையில் சம்பவ இடம் விரைந்த போலீஸார் சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த குழந்தையின் தாய் யார்?, கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததால் குழந்தையை கொன்று வீசி சென்றனரா?
அல்லது வேறு ஏதுனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.