மகள் காணவில்லை..போலீஸில் புகார் - தந்தையே அடைத்து வைத்து வன்கொடுமை செய்த கொடூரம்!
மகளை தந்தையே பல ஆண்டுகளாக வன்கொடுமை செய்தது பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
காணவில்லை..
மும்பையின் மகாலஷ்மி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அண்மையில் அவரை காணவில்லை என அந்த சிறுமியின் தந்தை டார்டியோ காவல் நிலையத்தில் பதற்றத்துடன் வந்து புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர வீசாரணை செய்து சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், காணாமல் போன சிறுமியை குற்றப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
வன்கொடுமை
அங்கு சிறுமியிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது சிறுமியை 12 வயது முதலே அவரது தந்தை வன்கொடுமை செய்து வந்துள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தந்தையாலேயே,
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ஒருக்கட்டத்தில் அவரிடமிருந்து தப்பி வீட்டை விட்டு ஓடியுள்ளார். இது குறித்து சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.