தந்தைக்கு மனைவியான மகள்; 10 வருஷமா - பகீர் பின்னணி!
இறந்த தந்தையின் மனைவியாக நடித்து, மகள் ஓய்வூதியம் பெற்றுள்ளார்.
இறந்த தந்தை
உத்தர பிரதேசம், எட்டா மாவட்டம் அலிகஞ்சிலைச் சேர்ந்தவர் வஜாஹத் உல்லா கான். வருவாய் துறை கிளர்க்காக பணியாற்றினார். கடந்த ஆண்டு ஜனவரியில் காலமானார். முன்னதாக அவரது மனைவி சபியா பேகம் இறந்துவிட்டார்.
இந்நிலையில், இவர்களுக்கு மோசினா பர்வேஸ் (36) என்ற மகள் உள்ளார். 2017ல் பரூக் அலி என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மனைவியான மகள்
இதற்கிடையில், மோசினா தனது இறந்த தந்தையின் மனைவி எனக் கூறி 10 ஆண்டுகளாக குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். இதனை அறிந்த கணவர் அவரிடம் இருந்து பிரிந்துள்ளார். மேலும், மனவியில் மோசடி விவரத்தை போலீஸில் புகாரளித்துள்ளார்.
மனைவியாக போலி ஆவணங்கள் கொடுத்து, சட்டவிரோதமாக மாதந்தோறும் மோசினா குடும்ப ஓய்வூதியம் பெற்று வருவதாக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், ரூ.12 லட்சத்துக்கு மேல் குடும்ப ஓய்வூதியமாக பெற்றுள்ளது தெரியவந்தது.
அவரது விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளித்ததில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.