ஐஏஎஸ் தம்பதியின் மகள் 10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை - சிக்கிய கடிதம்!

India Maharashtra Death
By Jiyath Jun 03, 2024 12:20 PM GMT
Report

ஐ.ஏ.எஸ். தம்பதியினரின் மகள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை     

மகாராஷ்டிரா மாநிலம் நரிமன்பாயின்ட் பகுதியில் மந்திராலயா அருகில் உள்ள அரசு அதிகாரிகள் குடியிருப்பில் ஐ.ஏ.எஸ். தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியின் மகள் லிபி ரஸ்தோகி (27) என்பவர் சட்டப்படிப்பு படித்து வந்தார்.

ஐஏஎஸ் தம்பதியின் மகள் 10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை - சிக்கிய கடிதம்! | Daughter Of Ias Officers Jumps Off Building Mumbai

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது லிபி ரஸ்தோகி ரஸ்தோகி கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தயவு செய்து ஆர்டர் பண்ணாதீங்க.. Zomato வேண்டுகோள் - என்ன காரணம்?

தயவு செய்து ஆர்டர் பண்ணாதீங்க.. Zomato வேண்டுகோள் - என்ன காரணம்?

சிக்கிய கடிதம் 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவரது அறையிலிருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் 'தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை' என குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐஏஎஸ் தம்பதியின் மகள் 10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை - சிக்கிய கடிதம்! | Daughter Of Ias Officers Jumps Off Building Mumbai

மேலும், லிபி ரஸ்தோகி கல்லூரி படிப்பில் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.