59 வயது தாய்க்கு 2வது திருமணம் செய்து அழகு பார்த்த மகள் - சுவாரஸ்ய நிகழ்வு!

Kerala Marriage Relationship
By Sumathi Aug 21, 2022 05:58 AM GMT
Report

தந்தை இறப்பிற்கு பின் தனிமையில் இருந்த தாய்க்கு அவரது மகள் 2வது திருமணம் செய்து வைத்துள்ளார்.

தாய்க்கு துணை 

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் (59). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. இருவருக்கும் திருமணமான நிலையில், ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார்.

59 வயது தாய்க்கு 2வது திருமணம் செய்து அழகு பார்த்த மகள் - சுவாரஸ்ய நிகழ்வு! | Daughter Marries Off Mother For Old Age

இந்நிலையில், தனது தாய் தனிமையில் இருப்பதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா, தாய்க்கு துணை வேண்டுமென சிந்தித்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். மேலும் தகுந்த மணமகனையும் தேட ஆரம்பித்தார்.

2-வது திருமணம்

அதனைத் தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன் (63) என்பவர்தான் தனது தாய்க்கு ஏற்ற துணை என்று முடிவு செய்தார். 2 மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர்.

59 வயது தாய்க்கு 2வது திருமணம் செய்து அழகு பார்த்த மகள் - சுவாரஸ்ய நிகழ்வு! | Daughter Marries Off Mother For Old Age

அவரிடம் தனது தாயின் தனிமை பற்றியும், அவருக்கு ஒரு துணை வேண்டும், அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று உருக்கமாக கூறினார் பிரசிதா. இதனை புரிந்து கொண்ட திவாகரன் 2-வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

நெகிழ்ச்சி சம்பவம் 

திவாகரனின் மனநிலை குறித்து அவரது 2 பெண்குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதை தொடர்ந்து, தனது தாய் ரதிமேனனின் சம்மதத்தை பெற்ற அவர் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி முடித்தார்.

 மகள் ஆசை 

இதுகுறித்து பிரசிதா கூறியதாவது, எனது அம்மாவுக்கு நாங்கள் 2 பெண் குழந்தைகள். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் அவரவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம்.

இந்த நிலையில் அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார். எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை.

அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது எனக் கூறினார்.