கண்ணாமூச்சு ஆடுவோம் - மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்!
விளையாட அழைத்து மாமியாரை, மருமகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணாமூச்சு
ஆந்திரா, அப்பண்ணபாளையம் வர்ஷிணி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணிய சர்மா. இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.

இவர்களுடன் சுப்பிரமணிய சர்மாவின் தாயார் கனக மகாலட்சுமி (66) வசித்து வந்தார். இந்நிலையில் சமையல் அறையில் மின் கசிவு ஏற்பட்டதில் தீயில் மாமியார் கனக மகாலட்சுமி சிக்கிக் கொண்டதாக லலிதா அலறினார்.
தகவல் அறிந்து பொதுமக்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்தார். தொடர் போலீஸ் விசாரணையில், மாமியாருடன் வசிப்பதை நான் விரும்பவில்லை. யூ-டியூப்பில் ‘முதியோரை கொலை செய்வது எப்படி, என்று ஆய்வு செய்தேன்.
மருமகள் வெறிச்செயல்
அதன்படி, மாமியாரிடம் அன்பாக பழக தொடங்கினேன். சம்பவத்தன்று திருடன் - போலீஸ் ஆட்டம் விளையாடலாம் என்று மாமியாரை அழைத்தேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அவரது கண்களை ஒரு துணியால் கட்டினேன்.

கைகளையும் கட்டினேன். இதற்கு முன்பாக பெட்ரோலை தயாராக வைத்து இருந்தேன். சமையல் அறைக்கு அவர் வந்ததும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினேன். அவர் அலறியபோது கீழே தள்ளிவிட்டேன். அவரது அலறல் வெளியே கேட்காமல் இருக்க டிவியை அதிக சத்தமாக வைத்து சீரியல் பார்த்தேன்.
பின்னர் ஸ்விட்ச் போர்டு மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினேன். இதற்குள் மாமியார் தீயில் கருகி இறந்துவிட்டார். ஆனால், வீட்டில் இருந்து புகை வந்ததால் அனைவரும் வந்து விட்டனர்.
அவர்களை நம்ப வைக்க மின்கசிவு என நாடகம் ஆடினேன் என மருமகள் லலிதா வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையி்ல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.