கண்ணாமூச்சு ஆடுவோம் - மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்!

Attempted Murder Andhra Pradesh Crime
By Sumathi Nov 10, 2025 11:19 AM GMT
Report

விளையாட அழைத்து மாமியாரை, மருமகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணாமூச்சு

ஆந்​தி​ரா, அப்​பண்​ண​பாளை​யம் வர்​ஷிணி குடி​யிருப்பு பகு​தியை சேர்ந்​தவர் சுப்​பிரமணிய சர்​மா. இவரது மனைவி லலி​தா. இவர்​களுக்கு இரண்டு பிள்​ளை​கள்.

கனக மகாலட்​சுமி - லலி​தா

இவர்​களு​டன் சுப்​பிரமணிய சர்​மா​வின் தாயார் கனக மகாலட்​சுமி (66) வசித்து வந்​தார். இந்நிலையில் சமையல் அறையில் மின் கசிவு ஏற்​பட்​ட​தில் தீயில் மாமி​யார் கனக மகாலட்​சுமி சிக்​கிக் கொண்​டதாக லலிதா அலறினார்.

தகவல் அறிந்து பொது​மக்​கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்தார். தொடர் போலீஸ் விசாரணையில், மாமி​யாருடன் வசிப்​பதை நான் விரும்​ப​வில்​லை. யூ-டியூப்​பில் ‘மு​தி​யோரை கொலை செய்​வது எப்​படி, என்று ஆய்வு செய்​தேன்.

ஒய்யாரமாக ஆசிரியை.. அரசு பள்ளியில் கால் அழுத்திய பழங்குடியின மாணவி!

ஒய்யாரமாக ஆசிரியை.. அரசு பள்ளியில் கால் அழுத்திய பழங்குடியின மாணவி!

மருமகள் வெறிச்செயல் 

அதன்​படி, மாமி​யாரிடம் அன்​பாக பழக தொடங்​கினேன். சம்​பவத்​தன்று திருடன் - போலீஸ் ஆட்​டம் விளை​யாடலாம் என்று மாமி​யாரை அழைத்​தேன். அதற்கு அவர் ஒப்​புக்​கொண்​டார். அவரது கண்​களை ஒரு துணி​யால் கட்​டினேன்.

கண்ணாமூச்சு ஆடுவோம் - மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்! | Daughter In Law Killed Fire Mil Andhra

கைகளை​யும் கட்​டினேன். இதற்கு முன்​பாக பெட்​ரோலை தயா​ராக வைத்து இருந்​தேன். சமையல் அறைக்கு அவர் வந்​ததும் பெட்​ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்​தினேன். அவர் அலறிய​போது கீழே தள்​ளி​விட்​டேன். அவரது அலறல் வெளியே கேட்​காமல் இருக்க டிவியை அதிக சத்​த​மாக வைத்து சீரியல் பார்த்​தேன்.

பின்​னர் ஸ்விட்ச் போர்டு மீது பெட்​ரோலை ஊற்றி கொளுத்​தினேன். இதற்​குள் மாமி​யார் தீயில் கருகி இறந்​து​விட்​டார். ஆனால், வீட்​டில் இருந்து புகை வந்​த​தால் அனை​வரும் வந்து விட்​டனர்.

அவர்​களை நம்ப வைக்க மின்​கசிவு என நாடகம் ஆடினேன் என மருமகள் லலிதா வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையி்ல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.