Saturday, Jun 21, 2025

தகாத உறவுக்கு தடை; மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள் - பரபரப்பு வாக்குமூலம்!

Attempted Murder Relationship Crime Viluppuram
By Sumathi 7 months ago
Report

மாமியாரை கொன்ற மருமகள் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

தகாத உறவு

விழுப்புரம், என். ஆர்.பாளையம் காலனியைச் சேர்ந்தவர் கருணா மூர்த்தி. கடலூர் பெரியார் அரசு கல்லுாரியில் பி.ஏ., படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் படித்து வந்த சுவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

சுவேதா - ரமணி

அதன்பின், செங்கல்பட்டில் தங்கி தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். சுவேதா, மாமியார் ரமணியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ராணி மர்மமான முறையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனே அவரது இளைய மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் சுவேதாவில் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து, மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக்கொண்டார்.

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

கண்டித்த மாமியார்

இதனையடுத்து, எதிர் வீட்டை சேர்ந்த கள்ளக்காதலன் சதீஷ் குமார், சுவேதா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில் சுவேதா, கல்லூரியில் படிக்கும்போதே சில ஆண் நண்பர்களுடன் தவறான பழக்கம் இருந்தது. திருமணத்திற்கு பின், கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார்.

தகாத உறவுக்கு தடை; மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள் - பரபரப்பு வாக்குமூலம்! | Daughter In Law Burnt Mother In Law For Affair

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எதிர் வீட்டில் வசிக்கும் டிரைவர் சதீஷ் குமாருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மாமியார் ராணி கூலி வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவார். சில நேரங்களில் இரவு வெளியூரில் தங்கி வேலை செய்வார். இந்த சமயத்தில் நானும் சதீஷ்குமாரும் உல்லாசமாக இருந்து வந்தோம்.

சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் நாங்கள் உல்லாசமாக இருந்ததை மாமியார் ராணி நேரில் பார்த்துவிட்டார். என்னிடம் கடுமையாக பேசி, தீபாவளிக்கு ஊருக்கு வரும் எனது கணவரிடம் தெரிவிப்பதாக கூறினார். அதை நான், சதீஷ்குமாரிடம் கூறினேன். அவர் பெட்ரோல்ஊற்றி தீ வைத்து எரித்து விடுவோம் என்றார்.

மருமகள் வெறிச்செயல்

அன்று மாலை மாமியார் ராணியிடம் நைசாக பேசி வெளியில் அழைத்து சென்றேன். தீபாவளிக்கு துணி எடுத்துக்கொண்டு, ஓட்டலில் பிரைடு ரைஸ் வாங்கிக் கொண்டு இரவு 8 மணிக்கு வீடு திரும்பினோம். தூக்க மாத்திரைகளை பவுடராக்கி பிரைடுரைசில் கலந்து மாமியாருக்கு கொடுத்தேன்.

சிறிது நேரத்தில் அவர் தூங்கி விட்டார். இரவு 10 மணிக்கு சதீஷ் குமார் வீட்டிற்கு வந்தார். 2லிட்டர் பெட்ரோலை ஒரு பிளாஸ்டிக் மக்கில் ஊற்றி மாமியார் ராணியின் உடல் முழுவதும் ஊற்றினார். நான்தீ வைத்தேன். உடனடியாக சதீஷ்குமாரை அங்கிருந்து அனுப்பிவிட்டேன்.

ஊர் மக்கள் திரண்டு வந்து மாமியாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சதீஷ்குமாரும் உதவி செய்வதுபோல் உடன் சென்றார் என பகீர் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.