தாய்க்கு ஆசையாக மறுமணம் செய்து வைத்த மகள் - நெகிழ்ச்சி!
தனது தாய்க்கு மகள் மறுமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்க்கு மறுமணம்
மும்பையைச் சேர்ந்தவர் ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி. இவரது தாயார் மவுசுமி. இவர் கணவரை இழந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது மகள் ஆர்த்தி அவருக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து மகள் தெரிவிக்கையில்,
அப்பா இறந்த பிறகு, அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு குடிபெயர்ந்தேன், நான் அங்கு வளர்ந்தேன், எனக்கு 2 வயது, அப்போது அம்மாவுக்கு 25 வயது. 'நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று எல்லோரும் சொல்வார்கள்.
நெகிழ்ச்சி
ஆனால் எனது தயார் மறுத்து விட்டார். நான் திருமணம் செய்து கொண்டால் எனக்கு அன்பு கிடைக்கும் ஆனால் என் மகளுக்கு ஒரு தந்தை கிடைக்க மாட்டார் என்று கூறுவார்" தற்போது அம்மாவுக்கு நான் ஒரு துணையைக் கண்டுபிடித்தேன்,
நானும் ஒரு அப்பாவைக் கண்டறிந்தேன் என்பதை அப்போது நான் உணர்ந்தேன். அம்மா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாள், அது என்னை மிகவும் மகிழ்ச்சியாக்குகிறது" எனத் தெரிவித்துள்ளார்.