மகளின் தோழியை கர்பமாக்கிய தந்தை - அப்பா மீது மகள் அளித்த அதிர்ச்சி புகார்

Tamil nadu Chennai
By Karthikraja Aug 04, 2024 03:30 AM GMT
Report

மகளின் தோழியை திருமணம் செய்துள்ள தந்தை மீது மகள் புகார் அளித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

மகள் புகார்

சென்னை டிஜிபி அலுவலகத்தில் தன் அப்பா மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து தந்தை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். 

daughter

செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் தந்தை மேல் புகார் அளிக்க வந்துள்ளேன். என் தந்தை பெயர் மோசஸ். என் தந்தையும் என் தாயும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆனால், திருமணம் செய்ததிலிருந்தே அவர்கள் இருவருக்கும் இடையே நிறைய பிரச்சனை இருந்தது.

வீடியோ கேமில் மூழ்கிய தந்தை - வெப்பத்தில் துடிதுடித்து இறந்த 2 வயது குழந்தை

வீடியோ கேமில் மூழ்கிய தந்தை - வெப்பத்தில் துடிதுடித்து இறந்த 2 வயது குழந்தை

வழக்கறிஞர்

வழக்கறிஞரான என் தந்தை தன்னை பாதிரியார் என்றும் சொல்லி கொண்டு, நிறைய பெண்களை ஏமாற்றியதோடு, கள்ள தொடர்பும் வைத்திருக்கிறார். இந்த விஷயம் எங்களுக்கு தெரியவந்ததையடுத்து, நாங்கள் ஒவ்வொரு முறையும் அவரை மன்னித்து விட்டோம். 

pregnant girl

அதன் பின், ஒரு பெண்ணை அவர் திருமணமே செய்து கொண்டதால், என் அம்மா அவரை விட்டு பிரிந்து விட்டார். ஆனால் முறைப்படி விவகாரத்து பெறவில்லை. என் அப்பா வழக்கறிஞர் என்பதால், அவரிடம் புகார் அளிக்க ஒரு குடும்பம் வந்தது. அந்த குடும்பத்திலிருக்கும் 24 வயதுடைய பெண் என்னுடைய தோழி ஆவார். அந்த பெண்ணையும் கல்யாணம் செய்து, ஒரு குழந்தையையும் பெற்றுள்ளார் என் அப்பா.

என் அம்மா இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால், பல பெண்களுடன் தொடர்பு வைத்து‌ அவர்களை கர்ப்பமாக்கி பின் அபார்சனும் செய்ய வைத்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் இவர் மீது புகார் அளிக்க பயந்து உள்ள நிலையில் நான் புகார் அளிக்க முன் வந்துள்ளேன். என் அப்பாவை கைது செய்யவில்லை எனில் என்னைபோல பல பெண்கள் புகார் அளிக்க வருவார்கள். எனவே , என்னுடைய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பெண்ணின் தந்தை மோசஸ், தன்னிடமிருந்து 25 லட்சம் பணம் பறிக்கும் நோக்கில் தன்னுடைய மகள் இந்த புகாரை அளித்துள்ளார் என கூறியுள்ளார்.