தாயின் அலறல் சத்தம்; மிரண்ட 20 வயது மகள் - அரங்கேறிய கொடூரம்!

Attempted Murder Sexual harassment Uttar Pradesh Crime
By Sumathi Nov 03, 2023 10:40 AM GMT
Report

தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேசம், பண்டா கிராமத்தில் ராஜ்குமார் சுக்லா என்ற நபரின் வீட்டில் வேலை செய்வதற்காக 40 வயது தலித் பெண் ஒருவர் சென்றுள்ளார்.

dalit-woman-raped

அப்போது அந்த பெண்ணின் 20 வயது மகள், சுக்லாவின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அறை ஒன்றிலிருந்து தாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் அங்கு சென்று பார்த்ததில் தாயின் உடல் 3 துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்துள்ளது.

36 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

36 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

கொடூர சம்பவம் 

தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் அளித்த நிலையில், ராஜ்குமார் சுக்லா, அவரது சகோதரர் பவா சுக்லா மற்றும் ராமகிருஷ்ண சுக்லா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

uttar pradesh

இதற்கிடையில் மூவரும் தப்பியோடிய நிலையில் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.