தாயின் அலறல் சத்தம்; மிரண்ட 20 வயது மகள் - அரங்கேறிய கொடூரம்!
தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
உத்தரப் பிரதேசம், பண்டா கிராமத்தில் ராஜ்குமார் சுக்லா என்ற நபரின் வீட்டில் வேலை செய்வதற்காக 40 வயது தலித் பெண் ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் 20 வயது மகள், சுக்லாவின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அறை ஒன்றிலிருந்து தாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் அங்கு சென்று பார்த்ததில் தாயின் உடல் 3 துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்துள்ளது.
கொடூர சம்பவம்
தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் அளித்த நிலையில், ராஜ்குமார் சுக்லா, அவரது சகோதரர் பவா சுக்லா மற்றும் ராமகிருஷ்ண சுக்லா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மூவரும் தப்பியோடிய நிலையில் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.