தலித் இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு கொடுமை; கீழே நெருப்பு வேறு.. பயங்கர சம்பவம்!
தலைகீழாக தொங்கவிட்டு தலித் இளைஞரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு சந்தேகம்
தெலங்கானா, யாப்பல் பகுதியை சேர்ந்தவர் ஆடு வியாபாரி ஸ்ரீனிவாஸ். இவரது பட்டியில் இருந்த 2 ஆடுகள் காணாமல் போகியுள்ளது. இதனால் அதே பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது சந்தேகப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, இருவரையும் பிடித்து வந்து ஆட்டு பட்டியில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளார். மேலும், தீ மூட்டி புகை போட்டு ஆடுகளை திருடியதாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார்.
கொடூர தாக்குதல்
ஒருவழியாக அங்கிருந்து தப்பிய இருவரும் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், சீனிவாஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.