சிவகார்த்திகேயனின் கல்லூரியில் டி.இமான்; கடைசி நேரத்தில் சோகம் - இதுதான் காரணமா?

Sivakarthikeyan Tamil Cinema D Imman Tamil Actors trichy
By Jiyath Jun 04, 2024 11:59 AM GMT
Report

இசையமைப்பாளர் டி.இமானின் இசை நிகழ்ச்சி பலத்த மழை காரணமாக ரத்தானதால் ரசிகர்கள் சோகத்துடன் வீடு திரும்பினர். 

இசை நிகழ்ச்சி

இசையமைப்பாளர் டி.இமானின் இசை நிகழ்ச்சி திருச்சியில் உள்ள ஜேஜே பொறியியல் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இதற்காக 8500-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தது.

சிவகார்த்திகேயனின் கல்லூரியில் டி.இமான்; கடைசி நேரத்தில் சோகம் - இதுதான் காரணமா? | D Imman Music Concert Cancelled In Trichy

ஆனால், மாலை 6 மணி அளவில் பலத்த காற்று வீசத் துவங்கி பின்பு கனமழையும் பெய்யத் தொடங்கியது. மேலும், சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த விளக்கு கம்பங்கள், தகர சீட்டுகள் , சாய்ந்து விழும் நிலைக்கு சென்றது.

'தயவு செஞ்சு இத நம்பாதீங்க' - அஜித் மனைவி ஷாலினியால் ரசிகர்கள் அதிர்ச்சி!

'தயவு செஞ்சு இத நம்பாதீங்க' - அஜித் மனைவி ஷாலினியால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ரசிகர்கள் சோகம் 

இதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ரசிகர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். இதன் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்தானதால் ரசிகர்கள் மழையில் நனைந்தபடி சோகத்துடன் வீடு திரும்பினர்.

சிவகார்த்திகேயனின் கல்லூரியில் டி.இமான்; கடைசி நேரத்தில் சோகம் - இதுதான் காரணமா? | D Imman Music Concert Cancelled In Trichy

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. டி.இமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த ஜேஜே பொறியியல் கல்லூரியில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.