இதுதான் அண்ணாமலைக்கு இறுதி எச்சரிக்கை; பொறுக்கமாட்டேன் - சி.வி.சண்முகம் ஆவேசம்!
விமர்சிப்பது குறித்து அண்ணாமலைக்கு சி.வி.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணாமலை பேச்சு
விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மோடி ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் அண்ணாமலைக்கு துளியும் இல்லை.
மோடி வெற்றி பெற வேண்டும் என்றால் இங்கு நீங்கள் அதிமுகவை ஆதரித்து பேச வேண்டும் ஆனால் அதற்கு மாறாக, அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அம்மாவை (ஜெயலலிதா) விமர்சிக்கிறார். அண்ணாதுரையை விமர்சிக்கிறார்.
சி.வி.சண்முகம் எச்சரிக்கை
அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன? யாருக்கு நீங்கள் மறைமுகமாக உதவுகிறீர்கள்? உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். அண்ணாமலை அவர்களே, இனியும் எங்களை சீண்டாதீர்கள். அண்ணாதுரை இறந்து எத்தனை வருடங்கள் ஆகிறது. இப்போது அவரை விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? காரணம் இருக்கு.
அண்ணாமலை ஒரு பாதயாத்திரை போயிட்டு இருக்காரு. ஆனா யாருமே அதை கண்டுக்கல.
அதனால் திருவிழாவில் காணாமல் போல குழந்தையை போல அண்ணாமலை கத்திகிட்டு இருக்காரு. நான் ஒருத்தன் இங்கே இருக்கன்டா, நானும் ரவுடிதான் டா என கத்திட்டு இருக்காரு. உன் இருப்பை காட்டிக் கொள்ள எங்கள் தலைவர்களை இழிவுப்படுத்துவியா நீ? இத்தோடு அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்திக்கோங்க. இல்லையென்றால் அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.