அதிகாலை 3 மணியில் இருந்தே க்யூ; ரேஷன் கடை தோத்துரும் - ஐபோன் 15 வாங்க முண்டியடித்த மக்கள்!
ஐபோன் 15 வாங்க மும்பை மற்றும் டெல்லி ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஐபோன் 15
ஆப்பிள் நிறுவனம் கடந்த 12-ம் தேதி ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோமேக்ஸ், ஐபோன் வாட்ச் 9, அல்ட்ரா வாட்ச் 2 எனப் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்தது.
இந்தியாவில் ஐபோன்களை விற்பனை செய்யும் ஆப்பிளின் பிரத்யேக ஷோரூம்கள் மும்பை மற்றும் டெல்லியில் இருக்கின்றன. அங்கு, அதிகாலை 3 மணியிலிருந்து ஐபோன் 15 வாங்க மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
குவியும் கூட்டம்
அதில், வரிசையில் முதலில் நின்று வாங்கியவர்களில் ஒருவர் கூறுகையில், "நான் அகமதாபாத்தில் இருந்து இங்கு வந்து காலை 3 மணியிலிருந்து வரிசையில் காத்திருந்தேன். 17 மணி நேர காத்திருப்புக்கு பிறகுதான் போன் வாங்க முடிந்தது'' என்றார்.
கருப்பு, மஞ்சள், ஊதா, பச்சை, பிங்க் ஆகிய நிறங்களில் இந்த புதிய ஐபோன்கள் கிடைக்கும். ஐபோன் 15 ரூ.79,900 என்ற விலையில் தொடங்குகிறது. ஐபோன் 15 பிளஸ் ரூ.89,900 என்றவிலையில் தொடங்குகிறது. ஐபோன் புரோ ரூ.1,34,900 என்ற விலையில் தொடங்குகிறது.