இத்தாலியில் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

curfew corona lockdown italy
By Jon Mar 14, 2021 01:50 PM GMT
Report

இத்தாலியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். ஒரு வருடத்துக்கு மேலாகியும் உலகத்தின் பல இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இத்தாலியில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

நாட்டின் லோம்பார்டி, லோசியோ உள்ளிட்ட 7 நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிக பாதிப்புகளை பதிவு செய்துள்ளன. இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், எதிர்வரும் திங்கள்கிழமை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.