ஒரே வெற்றி!! 9 அணிகளுக்கு விபூதி அடிச்ச சென்னை சூப்பர் கிங்ஸ் - தரமான சம்பவம்
சென்னை அணி நேற்று பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணி மட்டுமே தற்போது வரை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. மற்ற அணிகள் அனைத்துமே Play off சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.
16 வெற்றி பெரும் அணிகள் நிச்சயமாக அடுத்த சுற்றிற்கு தகுதி பெற்று விடும் என்ற நிலையில், கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் தலா 8 வெற்றியுடன் 16 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதல் 2 இடத்தில் உள்ளன.
அதே நேரத்தில், அடுத்த 2 இடங்களுக்கு இன்னும் கடும் போட்டி நீடிக்கிறது. Calculator வைத்து பல கணிப்புகளை நடத்திய ரசிகர்கள் இன்னும் பெங்களூரு அணிக்கு கூட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்
சென்னை வெற்றி
இந்த சூழலில், கட்டாயமாக வெற்றி பெறவேண்டும் என நேற்று களமிறங்கிய சென்னை அணி, முதலில் பேட்டிங் செய்து 167/9 ரன்களை குவித்தது. அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43(26) ரன்களை எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியை, சென்னை அணி பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து வெளியேற்றினர். அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் விக்கெட் இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது.
28 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியுடன் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி பின்தங்கினால் தான் தங்கள் அணி முன்னேறும் என காத்திருந்த அணிகள் ஏமாற்றத்தையே பெற்றனர்.
குறிப்பாக சென்னை அணியின் வெற்றி தகுதி பெற நெருக்கத்தில் இருக்கும் ஹைதரபாத், லக்னோ அணிக்கு பெரிய இடியாக விழுந்துள்ளது. நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் லக்னோ அணி கொல்கத்தாவிடம் மரண அடி வாங்கியது இதில் குறிப்பிடத்தக்கது.
அதே போல பல calculator கணக்குகளும் நேற்றுடன் முடிந்துள்ளன. அதில் குறிப்பாக இடம்பெறுவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான். பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளின் அடுத்து சுற்று வாய்ப்பும் கிட்டத்தட்ட முடிந்துள்ளது.