திடீரென சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய பத்திரனா - ரசிகர்கள் அதிர்ச்சி!
சிஎஸ்கே அணியில் இருந்து பத்திரனா விலகியுள்ளார்.
சிஎஸ்கே
17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் சென்னையில் தொடங்கியது. ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரான இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
பத்திரனா விலகல்
இதானல் அவர் இலங்கை திரும்புகிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் 2024 இல் ஆறு போட்டிகளில் விளையாடி 7.68 எகனாமியில் 13 விக்கெட்டுகளை எடுத்தார்.
பத்திரனா விரைவில் குணமடைய சென்னை சூப்பர் கிங்ஸ் வாழ்த்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் வங்கதேசம் செல்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு முக்கிய வீரர்கள் விலகியிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.