ஆற்றில் குளிக்க சென்ற பெண்ணை அடித்து நார் நாராக கிழித்து கொடூரமாக சாப்பிட்ட முதலை - வீடியோ வைரல்!

Viral Video Death Odisha
By Vinothini Aug 18, 2023 07:48 AM GMT
Report

 முதலை ஒன்று பெண்ணை நார் நாராய் கிழித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளிக்க சென்ற பெண்

ஒடிசா மாநிலம், ஜெய்பூர் மாவட்டத்தில் பலட்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜோத்ஸனா ராணி (35) என்ற பெண் அந்த பகுதியில் உள்ள பிருபா ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அங்கு அவர் குளித்து கொண்டிருக்கும்போது முதலை ஒன்று இவரை கிழித்து சாப்பிடுறது.

crocodile-attacked-and-ate-a-women

இதனை அங்கு இருந்த பார்வையாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது, இது காண்போர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வீடியோ வைரல்

இந்நிலையில், அந்த வீடியோவில் முதலையின் தாடைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட அந்த பெண்ணை முதலை இழுத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் அந்த பெண்ணை முதலை, நார் நாராய் கிழித்து, அவரை முழுவதுமாக விழுங்கி விடுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீதம் இருந்த அப்பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.