அப்படி மட்டும் நடந்தால் ஓய்வு பெற்றிடுவேன் - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ!
ரொனால்டோ தனது ஓய்வு குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
ரொனால்டோ
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்துக் கொண்ட தகவல்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதில், நான் கோல் அடிக்காமல் போர்ச்சுகல் கோல் கீப்பர் கோல் அடித்து, எனது அணி உலகக் கோப்பையை வென்றாலும் களத்தில் மகிழ்ச்சியான மனிதனாக இருப்பேன். அப்படி நடந்தால், நான் கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் என்றார்.
ஓய்வு?
மேலும், மெஸ்ஸி குறித்து பேசியதில், அவர் ஒரு அற்புதமான வீரர். மெஜிசியன். நாங்கள் 16 ஆண்டுகளை கால்பந்து மேடையை பகிர்ந்து கொள்கிறோம். 16 ஆண்டுகள் என்று கற்பனை செய்து பாருங்கள். அதனால் அவருடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது என்றார். தொடர்ந்து ஓய்வு குறித்து, இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்.
அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள். 40 வயதில் முடிக்க விரும்புகிறேன். 40 என்பது சரியான வயதாக இருக்கும். ஆனால், எனக்கு தெரியவில்லை. எதிர்காலம் பற்றி தெரியவில்லை. சில நேரங்களில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு விஷயத்தைத் திட்டமிடுவீர்கள்.
நான் பலமுறை சொன்னது போல், வாழ்க்கை மாறும், என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.