மரண தண்டனை; கைதியின் வினோதமான ஆசை..என்ன தெரியுமா? நீதிமன்றத்தில் பரபரப்பு!
கொலை குற்றவாளி நீதிமன்றத்தில் வைத்த வினோதமான கோரிக்கை அதிர்ச்சி அளித்துள்ளது.
மரண தண்டனை
புளோரிடாவை சேர்ந்த ஸ்டீவன் லோரென்சோ (65) என்பவர் ஜேசன் கேல்ஹவுஸ் மற்றும் மைக்கேல் வச்சோல்ட்ஸ் ஆகிய 2 இரண்டு பெண்களை கத்தியில் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த குற்றத்திற்காக அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
அதாவது வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என நிருபிக்கப்பட்ட பிறகு, நீதிபதி தண்டனை வாசிக்க தொடங்கினார். அப்போது குற்றவாளியான லோரென்சோ ஒரு வினோதமான கோரிக்கையை விடுத்தார். அதாவது, தனக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், திபதி சபெல்லா, ஸ்டீவன் லோரென்சோவின் தண்டனையை வாசிக்கத் தொடங்கும் முன் நீதிமன்ற அறையில் இருந்த அனைவரையும் பார்த்து யாராவது பேச விரும்புகிறீர்களா என்று கேட்கிறார்.
வினோதமான ஆசை
இதனையடுத்து, லோரென்சோ தனது கையை உயர்த்தி, அங்கிருந்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார், மேலும், அவர் நீதிபதியிடம் தனக்கு மரண தண்டனை வேண்டும் என்று கோரினார், மேலும் அதை விரும்புவதற்கான காரணங்களையும் அவர் விளக்கினார்.
எனது வயதில் நான் வசதியாக இருக்க விரும்புகிறேன், எனவே எனக்கு மரண தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மரண தண்டனைக்காக 10 முதல் 15 வருடங்கள் என்னால் காத்திருக்க முடியும் என்று எனக்குத் தெரியும்,
ஆனால் இது பைத்தியகாரத்தனம் என்று நான் நினைக்கிறேன், என்று லோரென்சோ கூறியுள்ளார். எவ்வளவு சீக்கிரம் நான் கருணைக் கொலை செய்யப்படுகிறேனோ, அவ்வளவு சீக்கிரம் நான் வேறொரு புதிய உடலைப் பெற்றுக்கொண்டு பூமிக்கு மீண்டும் திரும்பி வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Steven Lorenzo, a man from Florida, was convicted for the gruesome murders of Jason Galehouse and Michael Wachholtz, both 26. The crimes, committed in 2003, were carried out with his accomplice, Scott Schweickert. They lured the victims to Lorenzo’s home, where they were tortured… pic.twitter.com/yiz5HoR583
— VisionaryVoid (@VisionaryVoid) January 25, 2024