ஹர்திக் பாண்டிய வீட்டில் நடந்த துயரம்: சோகத்தில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்
ஹர்திக் பாண்டிய வீட்டில் எதிர்பாராத துயரம் ஒன்று நிகழ்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் குர்னால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா. சையது முஷ்தாக் அலி தொடரில் பரோடா அணி கேப்டனாக உள்ள குர்னால். ஹர்திக் பாண்ட்யா வதோதராவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவர்களது தந்தை ஹிமான்சு 71. மகன்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி வெளியிட்ட இரங்கல் செய்தியில்,'பாண்ட்யா சகோதரர்களின் தந்தையிடம் பல முறை பேசியுள்ளேன். எப்போதும் உற்சாகமாக இருப்பார். இவரது மறைவு அதிர்ச்சி தருகிறது,' என தெரிவித்துள்ளார்.