இந்தியா- ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்: களமிறங்கிய இரண்டு தமிழர்கள்

tamizan nattrajan sundar
By Jon Jan 16, 2021 09:00 AM GMT
Report

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும், இந்தியா ஒரு போட்டியிலும் வென்றிருக்கிறது.

மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது, இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டியாக இது இருக்கும். எனவே இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணிகளும் பலத்த போட்டியிடும், இந்த நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அஜிங்க்யா ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா டிரா செய்ய பெரிதும் உதவிய அஸ்வின், ஹனும விஹாரி, முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, முக்கிய யார்கர் ஜஸ்ப்ரித் பும்ரா என பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இந்த நான்காவது டெஸ்டில் பங்கெடுக்கவில்லை.

அஸ்வின், ஜடேஜா, பும்ராவுக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை களமிறக்கியிருக்கிறது இந்தியா. கடந்த டெஸ்டில் விளையாடிய முகமது சிராஜ் இந்த டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கியிருக்கிறார்.

தற்போது வரை 13 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 35 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இதுவரை முகமது சிராஜ், நடராஜன் & ஷர்துல் தாக்கூர் மட்டுமே மாற்றி மாற்றி ஓவர்களை வீசி வருகிறார்கள்.