பிரபல இங்கிலாந்து வீரருக்கு கொரோனா: இலங்கையில் தனிமைப்படுத்தலில்
கிரிக்கெட் தொடருக்காக இலங்கை வந்துள்ள இங்கிலாந்து சகலதுறை வீரர் மொயீன் அலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இலங்கை அரசு விதிகளின்படி அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். மேலும், அவருடன் நேரடித் தொடா்பில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக அறியப்படும் கிறிஸ் வோக்ஸும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
அதேபோல், எஞ்சிய இங்கிலாந்து அணியினரும் பரிசோதிக்கப்படவுள்ளனா். முன்னதாக, இங்கிலாந்தில் இருந்து புறப்படும்போது மொயீன் அலிக்கு கொரோனா பாதிப்பு இல்லாது இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் அம்பாந்தோட்டைக்கு வந்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது